சனி, 30 மார்ச், 2013


புவி


புவி  
அப்போலோ 17லிருந்து காணம் புவியின் வண்ணப் படம்
அப்போலோ 17லிருந்து எடுக்கப் பட்ட புகழ்மிக்க வண்ணப் படிமம்
தகுதி நிலை
பெயரடைTerrestrial, Terran, Telluric, Tellurian, Earthly
சுற்றுப்பாதை பண்புகள்
காலகட்டம் J2000.0[note 1]
ஞாயிற்றண்மை வீச்சு147,098,074 km
0.9832898912 AU
அரைப்பேரச்சு149,597,887.5 km
1.0000001124 AU
வட்டவிலகல்0.016710219
சுற்றுக்காலம்365.256366 days
1.0000175 yr
சராசரி சுற்றுப்பாதை வேகம்29.783 km/s
107,218 km/h
சாய்வுக் கோணம்1°34'43.3"[1]
to Invariable plane
நெடுவரை இறங்கு கணு348.73936°
இறங்கு கணு சிறும வீச்சுக் கோணம்114.20783°
துணைக்கோள்1 (the Moon)
இயற்பியல் பண்புகள்
சராசரி ஆரம்6,371.0 km[2]
நடுவரை ஆரம்6,378.1 km[3]
துருவ ஆரம்6,356.8 km[4]
சமதளமாக்கல்0.0033528[3]
சுற்றளவு40,075.02 km (equatorial)
40,007.86 km (meridional)
40,041.47 km (mean)
நீள்கோளமேற்பரப்பளவு510,072,000 km²[5][6][note 2]
148,940,000 km² land  (29.2 %)
361,132,000 km² water (70.8 %)
கனஅளவு1.0832073×1012 km3
நிறை5.9736×1024 kg[7]
சராசரி அடர்த்தி5.5153 g/cm3
நடுவரை நில ஈர்ப்பு9.780327 m/s²[8]
0.99732 g
விடுபடு திசைவேகம்11.186 km/s 
உடு சுழற்சிக் காலம்0.99726968 d[9]
23h 56m 4.100s
நடுவரை சுழற்சி திசைவேகம்1,674.4 km/h (465.1 m/s)
கவிழ்ப்பச்சு23.439281°
எதிரொளிதிறன்0.367[7]
மேற்பரப்புவெப்பம்
   கெல்வின்
   செல்சியஸ்
குறைநடுமிகை
184 K287 K331 K
−89 °C14 °C57.7 °C
வளிமண்டலம்
மேற்பரப்புஅழுத்தம்101.3 kPa (MSL)
பொதிவு78.08% Nitrogen (N2)
20.95% Oxygen (O2)
0.93% Argon
0.038% Carbon dioxide
About 1% water vapor (varies with climate)
புவி (Earthசூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள்விட்டம்,நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம்நீலக் கோள் ,[note 3] எனவும் குறுப்பிடப்டுகின்றனர்.
மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் [10] வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.,[11][12][13][14]மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில்உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம்குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின, ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது.[15] இக்காலகட்டங்களில் புவியின் பௌதிக தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[16]
புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ளபெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள்தீபகற்பங்கள்மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும்நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.[17] [18][19]அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திட உள் மையம்ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது.
புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனயும் சுற்றி வருகிறன்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம்.[note 4] புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து,[20] 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்துஇருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒருவெப்ப ஆண்டுக்கு (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைகோள்நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனை சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்கள் (asteroid) தாக்கம் புவியின் சுற்று சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது.
புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லது அண்டத்தின் மையத்தில் புவி உள்ளது போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?

Golconda2.JPG
  • இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமானகோல்கொண்டா (கி.பி. 1364–1512)(படம்) ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
  • ஹைன்றிக் ரோரர் என்றசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
  • யாழ்ப்பாண வைபவமாலை என்பது மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும்.
  • கிலாபத் இயக்கம் என்பது 1919-1924 காலகட்டத்தில்பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு இயக்கம் ஆகும்.
  • வெள்ளை ரோசா என்பது நாசி ஜெர்மனியில் அடால்ப் இட்லருக்கு எதிராக வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு குழுவாகும்.

வியாழன், 14 ஜூன், 2012

மார்க்கோனி


குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)
பிறப்பு25 ஏப்பிரல், 1874
பொலோனியா, இத்தாலி
இறப்பு20 ஜூலை, 1937
பணிமின் பொறியாளர்
மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி(Guglielmo Marconiஏப்ரல் 25,1874 - ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள் வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். 'கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல்இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

தொமஸ் அல்வா எடிசன் 

தொமஸ் அல்வா எடிசன்

"Genius is one percent inspiration, ninety-nine percent perspiration."
– Thomas Alva Edison, Harper's Monthly(September 1932)
பிறப்புதொமஸ் அல்வா எடிசன்
பெப்ரவரி 11, 1847
மிலன், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
இறப்புஅக்டோபர் 18 1931(அகவை 84)
வெஸ்ட் ஆரஞ்சு, நியூஜெர்சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
கல்விபள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர்
பணிகண்டுபிடிப்பாளர், அறிவியலாளர், விஞ்ஞானி, தொழிலதிபர்
சமயம்டெய்சம்
பெற்றோர்சாமுவேல் ஓக்டென் எடிசன், ஜூனியர். (1804–1896)
நேன்சி மேத்தீவ்ஸ் எலியட் (1810–1871)
வாழ்க்கைத் துணைமேரி ஸ்டில்வெல் (தி. 1871–1884) 
மினா மில்லர் (தி. 1886–1931)
பிள்ளைகள்மேரியன் எஸ்டில்லா எடிசன்(1873–1965)
தாமசு ஆல்வா எடிசன் ஜூனியர் (1876–1935)
வில்லியம் லெஸ்லீ எடிசன் (1878–1937)
மேடலைன் எடிசன் (1888–1979)
சார்லஸ் எடிசன் (1890–1969)
தியோடேர் மில்லர் எடிசன் (1898–1992)
உறவினர்கள்லெவிஸ் மில்லர் (மாமனார்)
கையொப்பம்
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847  அக்டோபர் 18, 1931) ஒருஅமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின்காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும்ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் நிறுவனம் (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

லியொனார்டோ டா வின்சி



லியொனார்டோ டா வின்சி
லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற ஒரு  இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும்,கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர்,உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.

ஆர்க்கிமிடீஸ் 

ஆர்க்கிமிடீஸ்
செந்நெறிக் கிரேக்க மெய்யியல்
பண்டைய மெய்யியல்
Domenico-Fetti Archimedes 1620.jpg
சிந்தனையில் ஆர்க்கிமிடீஸ் பெட்டிஎன்பவர் வரைந்தது. (1620)
முழுப் பெயர்சிராக்கூசின் ஆர்க்கிமிடீஸ் (கிரேக்கம்: Άρχιμήδης)
பிறப்புc. கிமு 287 (சிராக்கூஸ், சிசிலி,மக்னா கிரீசியா)
இறப்புc. கிமு 212 (Syracuse)
சிந்தனை
மரபு(கள்)
அலெக்சாந்திரியாவின் இயூக்கிளிட்
இயற்கை மெய்யியல்
முக்கிய
ஆர்வங்கள்
கணிதம், இயற்பியல்,பொறியியல்,வானியல்,கண்டுபிடிப்பு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ஆர்க்கிமிடீசு தத்துவம்,நீர்நிலையியல்,நெம்புகோல்கள்,
infinitesimals
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும்,இயற்பியலாளரும், பொறியியலாளரும், கண்டுபிடிப்பாளரும்,வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். நீர்நிலையியல்,நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும்,நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும். திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர்மட்டுமன்றி எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.